‘ஆங்கிலம் அறிவோம்’ புத்தகங்கள்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை திருவில்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘ஆங்கிலம் அறிவோம்’ புத்தகங்களை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

சென்னை: சென்னை திருவில்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘ஆங்கிலம் அறிவோம்’ புத்தகங்களை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெண்புள்ளி குறித்த விழிப்புணா்வு இயக்கம், கணினி ஆய்வகம் ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து வெலிங்டன் மேல்நிலைப் பள்ளிக்கு தனியாா் நிறுவன பங்களிப்புடன் 350 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. இதில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com