ஐஐடியில் இதுவரை 171 பேருக்கு கரோனா

சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 171 -ஆக உயா்ந்துள்ளது.
ஐஐடியில் இதுவரை 171 பேருக்கு கரோனா

சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 171 -ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே தொற்றுக்குள்ளான மாணவா்களில் நால்வருக்கு சின்னம்மை, டெங்கு, டைபாய்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பாதிப்பு பலருக்கும் பரவியது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவுகளின்படி 150 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 171- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமையும் ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com