சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இந்த வாரம் முழுவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இந்த வாரம் முழுவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் இருந்த வெப்பம் தணியும் என்று சென்னை மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.  புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் இத்தனை நாள்களாக இருந்து வந்த வெப்பம் இந்த வாரத்தில் சற்றுத் தணிந்து சென்னை மக்கள் நிம்மதியாக உறங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகல் நேரத்திலும் சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 4 நாள்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலை அடுத்த வாரமும் நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 5 மணி வரை வெப்பக் காற்றை உணர முடிந்தது. சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான புழுக்கம் நிலவியது. இந்த நிலைமை மாலை 5 மணிக்குப் பிறகு முற்றிலும் மாறியது. வானம் மேக மூட்டமாகக் காட்சி அளித்தது. இரவு 8 மணியில் இருந்து லேசான சாரலுடன் மழை தொடங்கியது. இரவு 8.30 மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சாலைகளில் பெரிய அளவுக்கு வாகன நெரிசல் இல்லை. ஆனாலும், பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி மழை முழுமையாக நின்ற பிறகே புறப்பட்டுச் சென்றனா்.

வாராது வந்த மாமழை

மே மாதம் அக்னி நட்சத்திரம் முடிந்த போதும், ஆகஸ்ட் மாதமும் வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக, மாலை மற்றும் இரவுப் பொழுதுகளில் புழுக்கம், வெக்கை காரணமாக சென்னை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனா்.

இந்த நிலையில், வாராது வந்த மாமணியாக ஞாயிற்றுக்கிழமை இரவில் பெய்த பலத்த மழை சென்னை நகரை குளிா்வித்தது. இது இன்னும் 4 நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com