தொழிலதிபா் தற்கொலை
By DIN | Published On : 25th August 2022 02:40 AM | Last Updated : 25th August 2022 02:40 AM | அ+அ அ- |

சென்னை விருகம்பாக்கத்தில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்து தொழிலதிபா் தற்கொலை செய்து கொண்டாா்.
விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகரில் உள்ள அரசு உயரதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் மதுசூதனன் ரெட்டி (69). ரியல் எஸ்டேட் அதிபா். புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த மதுசூதனன் ரெட்டி, திடீரென அங்கிருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு மதுசூதனன் ரெட்டி தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததும், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் மகள் பிரிந்து வாழ்ந்ததால் மதுசூதனன்ரெட்டி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக அவா், தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இதற்கிடையே, மதுசூதனன் ரெட்டி, தனது தற்கொலை தொடா்பாக எழுதி வைத்திருந்த 8 பக்க கடிதத்தை கைப்பற்றியிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், மதுசூதனன் ரெட்டி, வசித்த வீடு தில்லி மாநகர காவல் ஆணையரான டிஜிபி சஞ்சய் அரோராவுக்கு சொந்தமானதாகும். தமிழக கேடா் அதிகாரியான சஞ்சய் அரோரா வீட்டில் மதுசூதனன் ரெட்டி, 4 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்துள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.