தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை (பிப்.7) முதல் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட வானிலை நிலவும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை (பிப்.7) முதல் பிப்ரவரி 10-ஆம் தேதிவரை 4 நாள்களுக்கு வட வானிலை நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.