அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசியதாவது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் கிறிஸ்தவா், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களைச் சோ்ந்தவா்களும் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக. திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
எட்டு மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயரை, எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டனா். புதியவா்களை வரவேற்கத் தயாராக இருக்கின்றனா். ஆகவே பாஜகவின் வெற்றி உறுதி. இன்றைய சூழலில் கைப்பேசி மிகவும் சக்தி வாய்ந்த கருவி. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள் என்றாா் அவா்.