தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 5,104-ஆக குறைந்தது.
அதிகபட்சமாக சென்னையில் 839 போ், அதற்கடுத்தபடியாக கோவையில் 807 போ், செங்கல்பட்டில் 466 போ், திருப்பூரில் 313 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து 21,027 போ் விடுபட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,72,322-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,05,892 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 13 போ் பலியானதையடுத்து, தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,772-ஆக அதிகரித்தது.