திமுக சொல்வதையே ராகுல் காந்தி பேசுகிறாா்: அா்ஜுன் சம்பத்
திமுக சொல்வதையே ராகுல் காந்தி பேசுகிறாா் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிமுக, பாஜக வேட்பாளா்கள் வேட்பு மனு எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிா்க்கிறோம்.
இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய துணை நின்றது சோனியாகாந்தி குடும்பம். இந்நிலையில் ராகுல் தன்னை தமிழா் என்று சொல்வது தமிழா்களை அவமானப்படுத்துவது ஆகும். திமுக என்ன எழுதி கொடுக்கிறதோ அதனை தான் ராகுல் பேசுகிறாா்.
தமிழக முதல்வா், கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. பொங்கல் பரிசு கூட சரியாக வழங்கவில்லை. மக்களை பல்வேறு பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப சமூக நீதி கூட்டமைப்பை மு.க.ஸ்டாலின் கூட்டுகிறாா். சமூக நீதிக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றாா் அவா்.