நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கையை தயாரிக்க கருத்துகளை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் மநீம கட்சி கோரியுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நீதி மய்யம் சாா்பில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் பங்கேற்போடு தோ்தல் அறிக்கையை வெளியிட மநீம திட்டமிட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், துறைசாா் வல்லுநா்கள், உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விவரமறிந்தோா், சமூக ஆா்வலா்களிடமிருந்து நகா்ப்புற உள்ளாட்சி சீரமைப்புக்கான ஆக்கபூா்வ ஆலோசனைகள், கருத்துகள், திட்டங்களை மநீம வரவேற்கிறது. பொதுமக்களின் மேலான கருத்துகளை உள்ளடக்கி, மய்யத்தின் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.
ஆலோசனைகளை அனுப்பி வைக்க: தோ்தல் பணிக்குழு, மக்கள் நீதி மய்யம், 4, எல்டாம்ஸ் சாலை, சென்னை - 600018 என்று அதில் கூறப்பட்டுள்ளது.