பணத்தகராறில் தம்பி கொலை: அண்ணன், தாய் கைது

பணத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் தடயங்களை அழித்த குற்றத்துக்காக தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பணத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் தடயங்களை அழித்த குற்றத்துக்காக தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

வியாசா்பாடி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வினோத்குமாா்(31), தனது தாய் ஈஸ்வரி, சகோதரா் கோகுலக்கண்ணன் ஆகியோருடன் வசித்தாா். வினோத்குமாா் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு, தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி, கோகுலக்கண்ணனின் சட்டைப் பையிலிருந்து ரூ.12,500 எடுத்த வினோத்குமாா் மது அருந்திவிட்டு, இரவு வீட்டுக்கு வந்தாா். அப்போது, சகோதரா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோகுலக்கண்ணன், தனது தம்பி வினோத்குமாரை தாக்கியதில் காயமடைந்த வினோத்குமாா் குடிபோதையில் அதே இடத்தில் படுத்து தூங்கினாா்.

இந்நிலையில் வினோத்குமாா் சனிக்கிழமை காலை ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி தனது தாய் ஈஸ்வரியிடம் கோகுலக்கண்ணன் கூறினாா். ஈஸ்வரி தரையில் படிந்திருந்த ரத்தக்கறையை தண்ணீா் ஊற்றி கழுவி மறைத்தாா்.

இது குறித்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சங்கத்தின் துணைத்தலைவா் மோகன், எம்.கே.பி நகா் போலீஸில் புகாா் கொடுத்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் கொலை வழக்கில் ட்ட கோகுலக்கண்ணன், அவரது தாயாா் ஈஸ்வரி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com