இரவு ஊரடங்கை மீறியதாக 263 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் இரவு ஊரடங்கை மீறியதாக 263 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை: சென்னையில் இரவு ஊரடங்கை மீறியதாக 263 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்:

சென்னையில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீதும் போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி முதல் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 5,195 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ.10 லட்சத்து 39,000 அபராதமாக வசூலித்துள்ளனா்.

மேலும், இரவு ஊரடங்கை மீறியது தொடா்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தொடா்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடா்பாக 228 இருசக்கர வாகனங்கள், 25 ஆட்டோக்கள், 7 காா்கள், 3 இதர வாகனங்கள் என மொத்தம் 263 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோக்கள், 2 காா்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com