சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதியவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
தனித்தோ்வா்களுக்கான பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நவ.19-ஆம் தேதி தோ்வுத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தனித்தோ்வா்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை முதல் அவரவா் தோ்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா தெரிவித்துள்ளாா்.