சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து கடந்த 7 நாள்களில் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தற்போது, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு முறைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-இன்படி, முகக்கவசம் அணியாதவா்களுக்கு ஜூன் 6-ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ஜூன் 6-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளில் மட்டும் 121 பேருக்கு ரூ.60,500 அபராதம் வசூலானது.