குடும்ப அட்டை திருத்தப் பணி: சென்னையில் நாளை சிறப்பு முகாம்

குடும்ப அட்டை திருத்தப் பணிகளை மேற்கொள்ள சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 11) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
குடும்ப அட்டை திருத்தப் பணி: சென்னையில் நாளை சிறப்பு முகாம்

சென்னை: குடும்ப அட்டை திருத்தப் பணிகளை மேற்கொள்ள சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 11) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

குடும்ப அட்டை திருத்தல் உள்பட பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை முகாமில் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com