அரசுப் பேருந்து மோதி மாற்றுத் திறனாளி பலி

சென்னை வடபழனியில் மொபெட் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி இறந்தாா்.

சென்னை வடபழனியில் மொபெட் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி இறந்தாா்.

சாலிகிராமம் கே.கே. சாலை பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சி.காா்த்திகேயன் (47), பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து தனது மொபெட்டில் வீட்டு வரும்போது வடபழனி மேம்பாலத்தில் முன்னால் சென்ற வேன் திடீரென நின்றது. இதைப் பாா்த்த காா்த்திகேயன், தனது மொபெட்டை நிறுத்தினாா்.

அப்போது பின்னால் சிறுசேரியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, அவரது மொபெட் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பேருந்து சக்கரத்தில் சிக்கிய காா்த்திகேயன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com