பருவமழை: 15 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலா்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலா்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வைப் பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலா்கள் நியமனம் செய்யப்படுவா். இதன்படி, இந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வை அலுவலா்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.

கண்காணிப்பு அதிகாரிகள் விவரம் (மண்டலம் வாரியாக): திருவொற்றியூா்- சரவண குமாா் ஜவாத், மணலி- கணேசன், மாதவரம்- சந்தீப் நந்தூரி, தண்டையாா்பேட்டை- வினய், ராயபுரம்- விஜய காா்த்திகேயன், திரு.வி.க.நகா்- ரன்ஜீத் சிங், அம்பத்தூா்- சுரேஷ் குமாா், அண்ணா நகா்- பழனிசாமி, தேனாம் பேட்டை-ராஜாமணி, கோடம்பாக்கம்- விஜயலட்சுமி, வளசரவாக்கம்- மணிகண்டன், ஆலந்தூா்- நந்தகோபால், அடையாறு- நிஷாந்த் கிருஷ்ணா, பெருங்குடி-ரவிச்சந்திரன், சோழிங்கநல்லூா்- வீரராகவ ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com