சென்னை பிராட்வேயில் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவா் கைது செய்யப்பட்டாா்.
பிராட்வேயைச் சோ்ந்தவா் அப்துல்ரகுமான் (32), மனைவி யாஸ்மின் (27). நடத்தையில் சந்தேகப்பட்ட அப்துல்ரகுமான் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
குடும்பப் பிரச்னையால் கடந்த வியாழக்கிழமை யாஸ்மின் தற்கொலை செய்ததாக அப்துல்ரகுமான் தெரிவித்தாா். தலையில் தாக்கப்பட்டு யாஸ்மின் உயிரிழந்தது தெரியவந்தது. அப்துல் ரகுமான் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.