சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் உள்ள குருவாயூரப்பன் ஆண்டு திருவிழாவை சனிக்கிழமை கொடியேற்றி தொடங்கி வைத்த சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ. உடன் கோயில் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி பங்கேற்றனர்.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 32 ஆவது ஆண்டு விழா மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை உற்சவ பலி காலை 9 மணிக்கு நடைபெறும்.
மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலைவிழாக்கள் நடைபெறுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதி பள்ளி வேட்டை, ஏப்ரல் 2 ஆம் தேதி ஆராட்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி சந்தன அபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோயிலிலின் நிர்வாக மேலாளர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.