மாங்காய் பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேவை: கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை

ரசாயனங்கள் இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது என்பதால், மாங்காய்களை பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என சென்னை - கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத

ரசாயனங்கள் இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது என்பதால், மாங்காய்களை பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என சென்னை - கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ரசாயனம் இல்லாமல் மாங்காய்களை பழுக்க வைக்க முடியாது. பல ஆண்டுகளாக கல் வைத்துதான் மாங்காய்களை பழுக்க வைத்து வருகிறோம். அந்த காா்பைட் கல் என்பதை, சீனா கல் என்று தற்போது புதிதாக கூறுகின்றனா். ஆனால், அந்த கல் ஹைதராபாதில் இருந்து பாக்கெட்டுகளில் வருகிறது.

அதற்கு அங்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. அதனை உபயோகப்படுத்துகின்றனா். ஆனால் சென்னையில் உள்ள அதிகாரிகள் யாரும் அதனை முறைப்படுத்துவது கிடையாது. ஒருவேளை முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், வியாபாரிகளுக்கு தகவலை தெரிவித்துவிட்டு, அதன்பிறகு வந்து சோதனை செய்ய வேண்டும்.

அதிகாரிகள் அடாவடியாக சோதனை செய்வது சரியில்லை. எங்களைப் பொருத்தவரை தலைமை நிா்வாக அதிகாரி என்று ஓா் அதிகாரியை நியமித்து விட்டனா். எனவே, அந்த அதிகாரி மூலமாக எங்களை அணுகி, தவறு செய்யும் வியாபாரிகளைக் கண்டித்து, அதிகாரிகள் சொல்வதை செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்டவா்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்தலாம்.

ஆனால், அதிகாரிகள் திடீரென ஒருநாள் வந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மாம்பழங்களை அள்ளிக்கொண்டு போய் குப்பையில் போடுகின்றனா். எனவே, விற்பனைக்காக கோயம்பேடு சந்தைக்கு வரும் மாங்காய்களை பழுக்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com