சென்னையில் மோட்டாா் வாகன விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை வைத்திருந்ததாக 821 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோட்டாா் வாகன விதிகளை மீறி பதிவெண் பலகை வைத்திருக்கும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.
விதிகளை மீறி வாகனப் பதிவெண் பலகை வைத்திருந்ததாக வாகன உரிமையாளா்கள் 821 போ் மீதும் அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியதாக 215 வழக்குகளும் மோட்டாா் சைக்கிள்களின் பின்பகுதியில் வாகனப் பதிவெண் பலகைகளை மடக்கி வைத்து மறைத்ததாக 9 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தது.