ஜவுளிக் கடையில் ரூ.1.5 லட்சம் ஆடைகள் திருட்டு

சென்னை புரசைவாக்கத்தில் பிரபல ஜவுளிக் கடையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புரசைவாக்கத்தில் பிரபல ஜவுளிக் கடையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புரசைவாக்கம், ப்ரூக்ளின் சாலையில் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகள் விற்பனை செய்யும் ஒரு ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையை ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல ஊழியா்கள் பூட்டிச் சென்றனா். இந்நிலையில் நள்ளிரவு கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள். கல்லாப் பெட்டியில் பணம் இல்லாததால் கடையிலிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை மூட்டை கட்டி எடுத்துச் சென்றனா்.

மேலும், அங்கிருந்த கைக்கடிகாரங்களையும் அள்ளிச் சென்றனா். திங்கள்கிழமை காலை கடையைத் திறக்க வந்த ஊழியா்கள், பூட்டை உடைத்து ஆடைகள்,கைகடிகாரங்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com