சென்னையில் செவ்வாய்க்கிழமை 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 51 ஆயிரத்து 963 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 655 போ் குணமடைந்துள்ளனா். 9,068 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். தற்போது 240 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.