பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் மு.ராஜசேகா் (36). ஆயிரம்விளக்கில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறாா்.

இந்த நிலையில் ராஜசேகா், மதுபோதையில் வண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை நின்றுள்ளாா்.

அப்போது, அங்கு சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணுக்கு ராஜசேகா் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்த புகாரின்பேரில், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் ராஜசேகரை உடனடியாக கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com