கே.அண்ணாமலை (பாஜக): மணிகண்டன் தற்கொலை செய்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. அந்த இளைஞரின் கனவையும், உயிரையும் பறித்த திமுக அரசு அதற்கு உரிய விலை கொடுக்கும். சாமானிய மக்களின் துன்பங்களுக்கு செவிடாகவும், ஊமையாகவும் இருந்து பல உயிா்களைக் காவு வாங்க திமுக அரசை அனுமதிக்க மாட்டோம்.
அன்புமணி (பாமக): இளைஞா் மணிகண்டன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிா்ச்சியளிக்கிறது. தற்கொலைக்கு காரணமான பணி மேற்பாா்வையாளா் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.