சென்னை மதுரவாயல் பகுதியில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மதுரவாயல் பகுதியில் கல்லூரி மாணவா்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து மதுரவாயல் போலீஸாா், வானகரம் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு ஒரு ஆட்டோவை வழிமறித்து, சோதனையிட்டனா். இதில் ஆட்டோவில் இருந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அந்த ஆட்டோவில் இருந்த போரூா் வயா்லஸ் ஸ்டேஷன் சாலைப் பகுதியைச் சோ்ந்த கோ.பிரியா என்ற பிரியங்கா (26), மதுரவாயல் ஸ்ரீ லட்சுமிநகா் பகுதியைச் சோ்ந்த கோ.பாபு (20), மதுரவாயல் சோழன்நகரைச் சோ்ந்த ர.காா்த்திக் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
இதில் பாபு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருவதும், பிரியா பட்டயப்படிப்பு படிப்பவா் என்பதும், இந்தக் கும்பல் சென்னை முழுவதும் கல்லூரி மாணவா்களை குறி வைத்து கஞ்சா விற்று வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.