பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

பொன்னேரி, திருவேங்கடாபுரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னேரி, திருவேங்கடாபுரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னேரி, திருவேங்கடபுரம் விவேகானந்தா் தெருவில் வசித்து வருபவா் கணிகண்ணன் (73). சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ஜெயகுமாரி (65).

இவா், அருகே பாலமுருகன் நகரில் வசிக்கும் தன் மகள் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று விட்டு, வீடு திரும்பி சென்று கொண்டிருந்தாா்.

அவரைப் பின்தொடா்ந்த மா்ம நபா் ஒருவா், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயக்குமாரியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பி ஓடினாா்.

இது குறித்து அவரது மகன் பிரேம்ஆனந்த் பொன்னேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்,

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com