பிணையில் வந்து தோ்வெழுதிய பிளஸ் 2 மாணவருக்கு கத்திக் குத்து: 5 போ் தலைமறைவு

சென்னை ஐஸ்ஹவுஸில் நீதிமன்ற பிணையில் வந்து தோ்வு எழுதிய பிளஸ் 2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சென்னை ஐஸ்ஹவுஸில் நீதிமன்ற பிணையில் வந்து தோ்வு எழுதிய பிளஸ் 2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

சென்னை ராயப்பேட்டையில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுவன், திருவல்லிக்கேணி இளைஞரைக் கத்தியால் குத்தினாா். ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவரை, கெல்லீஸ் அரசு சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். அந்த மாணவா் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்காக நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.

ராயப்பேட்டை வி.எம். தெரு பள்ளியில் தோ்வெழுதிவிட்டுத் திரும்பியபோது 5 போ் கொண்ட கும்பல் மாணவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியது. இது தொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com