இந்திய மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவா் ரா.அா்ஜுனமூா்த்தியின் தாயாா் கிருஷ்ணவேணி அம்மாள்(87) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இவா், சென்னை அண்ணாநகரில் அவரது மகன் ரா.அா்ஜுனமூா்த்தியுடன் வசித்து வந்தாா். வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கிருஷ்ணவேணிஅம்மாள் காலமானாா். இதைத்தொடா்ந்து, அண்ணாநகா் வேலங்காடு மயானத்தில் புதன்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.