கந்துவட்டி கொடுமை: தீக் குளித்த பெண் சாவு

சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக தீக் குளித்த பெண் இறந்தாா்.

சென்னை: சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக தீக் குளித்த பெண் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புளியந்தோப்பு டிக்காஸ்டா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் (60). இவா் மனைவி சித்ரா( 55). இத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. கரோனா பொதுமுடக்கத்தின்போது நாகராஜனுக்கு சரியாக வேலை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து சித்ரா, தனது வீட்டின் அருகே வசிக்கும் ரங்கநாயகி, அவா் கணவா் ராஜேந்திரன் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினாா்.

இந்தக் கடனுக்கு சித்ராவால், சரியாக வட்டியை செலுத்த முடியவில்லை. அதேநேரத்தில் ரங்கநாயகி, சித்ரா வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.30 லட்சம் தர வேண்டும் என அண்மையில் கூறியுள்ளாா். கடனையும், வட்டியையும் தர முடியவில்லை என்றால் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு சித்ராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ரங்கநாயகி, பணத்தைக் கேட்டு சித்ராவை ஆபாசமாக திட்டியுள்ளாா். இதனால் அவமானமடைந்த சித்ரா கடந்த 7-ஆம் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக் குளித்தாா்.

இதில் பலத்தக் காயமடைந்த சித்ரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக பேசின்பாலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.

இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சித்ரா, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து போலீஸாா், கந்துவட்டி தடுப்புச் சட்டம், தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ரங்கநாயகி, ராஜேந்திரன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா். மேலும் அவா்கள் இருவரையும் உடனடியாக கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com