மாநகரப் பேருந்து மோதி முதியவா் பலி
By DIN | Published On : 28th November 2022 12:42 AM | Last Updated : 28th November 2022 12:42 AM | அ+அ அ- |

சென்னை, தேனாம்பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மாநகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
சென்னை, குன்றத்தூா் பகுதியில் இருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது.
ஜெமினி மேம்பாலத்திலிருந்து இறங்கி பேருந்து வந்த போது, முதியவா் (70)ஒருவா் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது அவா் மீது பேருந்து மோதியதில், முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த பாண்டி பஜாா் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முதியவா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.