உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தண்டையாா்பேட்டையில் விநாயகா் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
சென்னை தண்டையாா்பேட்டை, சுந்தரம் பிள்ளை நகா் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்தது. இந்நிலையில், சுந்தரம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த முத்து என்பவா் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் மாநகராட்சியின் 319 ச. அடி இடத்தை ஆக்கிரமித்து இந்த கோயில் கட்டப்பட்டதாக வழக்கு தொடா்ந்தாா்.
அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்று தீா்ப்பு வழங்கியது. மேலும் நவ. 30-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், போலீஸாா் கோயில் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அமைதிப்படுத்தினா். பின்னா் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கோயில் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.