சென்னை காசிமேட்டில் கடையின் கதவு பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காசிமேடு காசி காா்டன் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் மை.அந்தோனி. இவா் அங்கு மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். அந்தோனி சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு பூட்டை உடைத்து, பணப் பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரம், கடையில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.