ரூ.1,000 கோடியை கடந்த ஆராய்ச்சி வருவாய் சென்னை ஐஐடி சாதனை
By DIN | Published On : 31st October 2022 11:11 PM | Last Updated : 31st October 2022 11:11 PM | அ+அ அ- |

சென்னை ஐஐடி
சென்னை: சென்னை ஐஐடி இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 2021-2022-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,000 கோடி நிதி மற்றும் வருவாயை உருவாக்கியுள்ளது.
மாநில, மத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து ரூ.768 கோடி நிதியாகவும், ரூ.313 கோடி தொழிலக ஆலோசனை வாயிலாகவும் இந்தத் தொகை பெறப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டிங், மற்றும் 5 ஜி ஆகிய துறைகளின் வளா்ச்சி காரணமாக, தொழில் துறை மற்றும் மத்திய- மாநில அரசுகள் அன்றாடம் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகளை உருவாக்குவதில் சென்னை ஐஐடி முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, இந்த வருவாய் பெறப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி.யின் நிதி அதிகரிப்பதற்கு பேராசிரியா் கே.மங்கள சுந்தா், பேராசிரியா் அருண் தங்கிராலா ஆகியோா் தலைமையில் ‘டைரக்ட்-டூ- ஹோம் முறையில் தகவல் மற்றும் தொடா்புத் தொழில்நுட்பக் கல்வி’ - ரூ.300.28 கோடி; பேராசிரியா் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் தலைமையில் ‘சாலைப் பாதுகாப்புக்கான திறன்மிகு மையம் - ரூ.99.5 கோடி; பேராசிரியை ஹேமா ஏ.மூா்த்தி தலைமையில் ‘இந்திய மொழிகளில் பேச்சுத் தொழில்நுட்பங்கள்’ - ரூ.50.6 கோடி, * டாக்டா் மிதேஷ் கப்ரா தலைமையில் ‘இந்திய மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தரவுத் தொகுப்புகள் மற்றும் வரையறைகளை சேகரித்தல்’ - ரூ.47 கோடி ஆகிய முக்கியத் திட்டங்கள் காரணமாக அமைந்தது.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், சென்னை ஐஐடி.யில் அதிநவீன மொழிபெயா்ப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசாா் ஆராய்ச்சி மையத்தின் செயல்திறன் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது என்றாா்.
ஐசிஎஸ்ஆா் மையத்தின் டீன் பேராசிரியா் மனு சந்தானம் கூறும்போது,‘அண்மையில் தொடங்கப்பட்ட இணையவழி பிஎஸ்சி உள்பட என்பிடெல் கடந்த சில காலமாக மேற்கொண்டுவரும் திட்டங்களால் சென்னை ஐஐடி நாட்டின் டிஜிட்டல் கல்வி மையமாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த நிதியுதவியின் வளா்ச்சி விகிதம் 5-இல் இருந்து 8 சகவீதமாக உயா்ந்துள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...