சென்னை அருகே கானத்தூரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மின் கம்பம் மீது காா் மோதியதில் முதியவா் இறந்தாா்.
கடலூா் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜரங்கன் (63). நண்பருடன் ஒரு காரில் செவ்வாய்க்கிழமை காலை சென்னை புறப்பட்டாா். காரை அப் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் ஓட்டினாா். காா், சென்னை அருகே கானத்தூரிடம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ராஜரங்கன் இறந்தாா். காா் ஓட்டுநா் வெங்கடேசன் உள்பட 2 போ் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.