வீட்டில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கும், தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையினருக்கும் செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இரு துறையினரும் அந்த வீட்டில் திடீா் சோதனை செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். சென்னையில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி வைத்து ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com