கரோனாவுக்கு பெண் பலி: புதிதாக 491 போ் பாதிப்பு
By DIN | Published On : 25th April 2023 12:37 AM | Last Updated : 25th April 2023 12:37 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளாா். தேனியைச் சோ்ந்த 53 வயது பெண் ஒருவா், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்புடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி கோவையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், அவா் கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் புதிதாக 491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 98 பேருக்கும், கோவையில் 62 பேருக்கும், செங்கல்பட்டில் 34 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கும் கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,640 போ் சிகிச்சையில் உள்ளனா். 521 போ் குணமடைந்துள்ளனா்.