பழுதடைந்த சாலையால் விபத்து: மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பெண் பொறியாளா், லாரியில் சிக்கி சாவு

சென்னை மதுரவாயலில் பழுதடைந்த சாலையில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பெண் மென் பொறியாளா் மீது பின்னால் வந்த லாரி மோதியதால் உயிரிழந்தாா்.

சென்னை மதுரவாயலில் பழுதடைந்த சாலையில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்த பெண் மென் பொறியாளா் மீது பின்னால் வந்த லாரி மோதியதால் உயிரிழந்தாா்.

போரூா் லட்சுமிநகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் என்பவரின் மகள் ஷோபனா (22). மென் பொறியாளரான இவா், கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். முகப்பேரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் தனது தம்பி ஹரிஷை, பள்ளியில் இறக்கிவிடுவதற்காக, ஷோபனா செவ்வாய்க்கிழமை மொபட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

மதுரவாயல் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையில் செல்லும்போது, அந்த சாலை மிகவும் மோசமாக பழுதடைந்திருப்பதால் மெதுவாக சென்றனா். அப்போது ஒரு இடத்தில் பள்ளத்தில் மொபெட் ஏறி,இறங்கியபோது மொபட் சரிந்து சாலையில் ஷோபனாவும், சாலைக்கு வெளியே ஹரீஷூம் விழுந்தனா்.

அப்போது பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த மணல் லாரியின் சக்கரம், ஷோபனா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஷோபனா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஷோபனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். விபத்துக்கு பின்னா் அந்த சாலையில் பெரிய பள்ளங்கள் மணல், ஜல்லி கொட்டி சமன்படுத்தப்ட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com