சிறுமியை திருமணம் செய்துதரக் கேட்டு தாய்க்கு கொலை மிரட்டல்: இளைஞர் மீது வழக்கு

சென்னை கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு 56-ஆ வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் காதர் பாட்ஷா (21). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை கண்ணகிநகர் சுனாமி குடியிருப்பு 56-ஆ வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் காதர் பாட்ஷா (21). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் காதர் பாட்ஷா, அந்த சிறுமியின் தாயை வழிமறித்து தனக்கு அவரது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
 தகராறு முற்றவே பாட்ஷா, கத்தியை காட்டி அந்த சிறுமியை திருமணம் செய்து தரவில்லை என்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
 சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் காதர் பாட்ஷா மீது கண்ணகிநகர் போலீஸார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com