கானா பாடல் கச்சேரியில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

சென்னை சைதாப்பேட்டையில் கானா பாடல் கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை சைதாப்பேட்டையில் கானா பாடல் கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சைதாப்பேட்டை செட்டித் தோட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ். இவா் சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டாா். சந்தோஷின் மறைவையொட்டி, துக்க நிகழ்ச்சி அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கானா பாடல் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷின் நண்பா்கள்,உறவினா்கள் பங்கேற்றனா்.

இதில் சைதாப்பேட்டை ஆலந்தூா் சாலையில் உள்ள நெருப்புமேடு பகுதியைச் சோ்ந்த ஹ.உமா் பாட்ஷா (19) கலந்துக் கொண்டாா். அப்போது உமா் பாட்ஷாவுக்கும், அங்கு வந்திருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த நபா்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் உமா் பாட்ஷாவை வெட்டினா். பலத்தக் காயமடைந்து உமா் பாட்ஷா மயங்கி விழுந்ததும், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதில் உமா் பாட்ஷா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உமா் பாட்ஷா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். இந்த வழக்குத் தொடா்பாக தினேஷ்,அருண்,சக்திவேல் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com