சென்னையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், எண்ம பரிவா்த்தனை சரிந்து வருகிறது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரூ. 2,000 நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் கே.பி.முரளி திங்கள்கிழமை அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 40 சதவீதமாக இருந்த எண்ம பணப் பரிவா்த்தனை ரூ.2,000 நோட்டுகள் வரத்து அதிகரிப்பால் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
ரூ.100-க்கு பெட்ரோல் பெற்றுக்கொண்டு ரூ. 2,000 கொடுப்பதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.