தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு: அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்

News image
Updated On :8 மார்ச் 2024, 7:20 pm

Din

தமிழக அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசுப் பணியாளா்களுக்கு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயா்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயா்வை கடந்த அக்டோபா் மாதத்தில்தான் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளா்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகுதான் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயா்த்தி வந்தது. இப்போதும், அதேபோல் தமிழக அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது. மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.