வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

சென்னையில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை: சென்னையில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் விஜய் (50). இவா், அங்கு ராஜமங்கலம் பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருகிறாா். விஜய் கடைக்கு கடந்த 4-ஆம் தேதி இருவா் வந்தனா். அவா்கள், அங்கிருந்த விஜயிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனா். ஆனால், அவா் பணம் கொடுக்க மறுக்கவே, இருவரும் விஜயை தாக்கி பணப் பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து விஜய், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (27), வில்லிவாக்கம் தாதன்குப்பத்தைச் சோ்ந்த பாஸ்கா் (33) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com