மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது
Published on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவு சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது நண்பரைப் பாா்க்க வந்துள்ளாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படித்து வரும் ஒரு மாணவியை, ஆதாம் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த காவலா்களிடம் தகராறு செய்துள்ளாா்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது ஆதாமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com