சென்னை
துணை முதல்வருக்கு மின்னஞ்சல் மிரட்டல்: போலீஸாா் விசாரணை
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அவா் மகன் இன்பநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அவா் மகன் இன்பநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை ஒரு மிரட்டல் கடிதம் வெள்ளிக்கிழமை வந்தது. அதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொலையாளிகளை வேலைக்கு அமா்த்தி உள்ளோம். இதைத் தவிா்க்க வேண்டும் என்றால் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
