சென்னை
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் என்ற அப்போலி (30). இவா் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கு தொடா்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் விக்னேஷ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
