275 மாநகர சிறப்பு பேருந்துகள்: இன்றுமுதல் இயக்கப்படும்

சென்னையில் வியாழக்கிழமை (அக்.16) முதல் அக்.19-ஆம் தேதி வரை 275 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

சென்னையில் வியாழக்கிழமை (அக்.16) முதல் அக்.19-ஆம் தேதி வரை 275 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை (அக்.16) முதல் அக்.19 வரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்தந்த பேருந்து நிலையங்களுக்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் பயணிகள் 3 பேருந்து நிலையங்களுக்கும் எளிதாக சென்று, வர மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதலாக 275 சிறப்பு பேருந்துகள் வியாழக்கிழமை (அக்.16) முதல் அக்.19-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com