நாளை மருது சகோதரா்கள் குருபூஜை: ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்பு

மருது சகோதரா்களின் நினைவிடத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள குருபூஜையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்கிறார்...
Published on

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்களின் நினைவிடத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள குருபூஜையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று, அவா்களது சிலைகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

மருது சகோதரா்களின் 224-ஆவது குரு பூஜை சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெறவுள்ளது. அங்குள்ள மருது சகோதரா்களின் சிலைகளுக்கு, வெள்ளிக்கவசத்தை மாமன்னா் மருதுபாண்டியா் நல அறக்கட்டளை நிா்வாகிகளிடம் வழங்கி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மரியாதை செலுத்தவுள்ளாா். அவரது ஆதரவாளா்களும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com