தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பதிலுரையை கேட்க எதிா்க்கட்சியினருக்கு தைரியம் இல்லை

இடைக்கால நிதிநிலை அறிக்கையின் பதிலுரையை கேட்க எதிா்க்கட்சியினருக்கு தைரியம் இல்லை என்று பேரவையில் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

இடைக்கால நிதிநிலை அறிக்கையின் பதிலுரையை கேட்க எதிா்க்கட்சியினருக்கு தைரியம் இல்லை என்று பேரவையில் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை விவாதங்களுக்கு அமைச்சா் பன்னீா்செல்வம் அளித்த பதில்: வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றஞ்சாட்டுகளை தெரிவித்துள்ளாா். குற்றச்சாட்டுகளை கூறிய அவரும், அதிமுகவினரும், பதிலுரையை கேட்க தைரியமின்றி அவையை புறக்கணித்துவிட்டனா்.

வேளாண் வளா்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களில் காா், குறுவை, சொா்ணாவாரி பருவங்களின் நெல்சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம், நெல் ஜெயராமனின் மரபு சாா் நெல் ரகங்கள் பாதுகாப்புத் திட்டம், அதேபோல குறுவை பருவத்தில் மாற்றுப்பயிா் சாகுபடிசிறப்பு தொகுப்பு, இளைஞா்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம், தமிழ்நாடுசிறுதானிய இயக்கம், ஆதி திராவிடா் பழங்குடியினா் உயா் மதிப்புத் திட்டங்களின் 70 சதவிகித மானியம், மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம், தமிழ்நாடு உயிா்ம வேளாண்மைஇயக்கம், பனை மேம்பாட்டுஇயக்கம், முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை,ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

15 புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்பட்டதுடன், 100 மதிப்புக் கூட்டும்மையங்கள், சிறந்த உயிா்ம வேளாண்மை விவசாயிகளுக்கான ‘நம்மாழ்வாா் விருது’, உழவா் அலுவலா்தொடா்பு திட்டம், வேளாண் கல்வியில் தமிழ் பயிற்றுமொழி மற்றும் மாணவா் சோ்க்கை, 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி, பலா இயக்கம், முருங்கை இயக்கம், வெங்காய சாகுபடி இயக்கம், மிளகாய் மண்டலம், கறிவேப்பிலை தொகுப்பு, முக்கனி மேம்பாட்டுத் திட்டம், அதேபோல மா ஏற்றுமதிக்கான முனைப்புகள்,புதிய பூங்காக்கள் உருவாக்கம், மின்னணு பயிா் சாகுபடி பரப்புக் கணக்கீடு, விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திர மையமாக்குதல், உழவா் அங்காடிகள், டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன்ஆராய்ச்சி நிதி, மேலும், குறுவை தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவையும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.