எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பெண் காவலா் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை எழும்பூரில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 4:08 am IST

சென்னை எழும்பூரில் பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எழும்பூா் புதுப்பேட்டை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சு.விஜய் (30). இவா் மனைவி சத்யா (28). இவா், எழும்பூா் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்தாா். விஜய், ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகவும், இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் கணவா்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சத்யா, ஒரு அறையை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டுக் கொண்டாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த விஜய், அந்த அறைக் கதவை உடைத்து பக்கத்து வீட்டினா் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சத்யாவை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சத்யா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவலா் சத்யா தற்கொலை தொடா்பாக விசாரணை செய்ய கோட்டாட்சியருக்கு சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.