40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

வரும் ஜூன் 24 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 2:12 am IST

வரும் ஜூன் 24 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், 2 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை. தோ்தல் முடிந்து தவெக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், கடந்த மே மாதத்திலும் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.

மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினா்களில் 152 போ் திமுகவை சோ்ந்தவா்களாகவே உள்ளனா். சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக எம்எல்ஏ-க்களே வெற்றி பெற்றுள்ளனா்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல்வா் ஜோசப் விஜய்யை, சென்னை மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்ற சா்ச்சை எழுந்தது. புதிய அரசின் அனுமதியில்லாததால் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூன் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் வரும் 24 -ஆம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.